இந்தியர்கள் மீது இவருக்கு என்ன அக்கறையோ.. புதிய ரூல்ஸ் போட்ட டிரம்ப்.. பல லட்சம் பேருக்கு லக்!
அமெரிக்க விசா பெறும் முறையில் இந்தியர்களுக்கு சில சலுகைகளை அளிக்க அமெரிக்கா அரசு முடிவு செய்து இருக்கிறது.
Recommended Video
நியூயார்க்: அமெரிக்க விசா பெறும் முறையில் இந்தியர்களுக்கு சில சலுகைகளை அளிக்க அமெரிக்கா அரசு முடிவு செய்து இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான புகார்களை வைத்து வருகிறார். இந்தியா அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிகமாக வரி விதிக்கிறது.
அமெரிக்காவை வரி விதிப்பின் மூலம் இந்தியா ஏமாற்றுகிறது என்று குறிப்பிட்டு வந்தார். இதனால் இரண்டு நாட்டு உறவில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால்
ஆனால் தற்போது திடீர் என்று புதிய திருப்பமாக அமெரிக்க விசா பெறும் முறையில் இந்தியர்களுக்கு சில சலுகைகளை அளிக்க அமெரிக்கா அரசு முடிவு செய்து இருக்கிறது. இந்தியர்கள் வேகமாகவும், எளிதாகவும் விசா பெறுவதற்கு புதிய முறையை கொண்டு வர இருக்கிறார்கள்.
எப்படி
அதன்படி இனிமேல் விசா புதுப்பிக்க விண்ணப்பிக்கும் இந்தியர்களில் 14 வயதிற்கு கீழே இருப்பவர்களுக்கும், 79 வயதிற்கு மேலே இருப்பவர்களும் நேரில் தூதரகம் வர வேண்டிய அவசியம் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் முதல்முறை விசா விண்ணப்பிக்கும் போது சிலர் நேரில் வந்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.
ஆம் அப்படித்தான்
ஆம் முன்பு அமெரிக்கா விசா பெற விரும்பும் நபர்கள், எல்லோரும் அமெரிக்கா விசா அலுவலகத்தில் நடைபெரும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் இனி எல்லோரும் அப்படி கலந்து கொள்ள வேண்டியது இல்லை. சில முக்கிய பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளாமலே விசாவை பெற முடியும்.
ஆனால் என்ன
ஆனால் இது எல்லா பணிகளுக்கும் பொருந்தாது. சில பணிகளுக்கு மட்டும்தான். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சென்னை உட்பட மொத்தம் 7 இடங்களில் அமெரிக்கா விசா பெற முடியும்.
ஏன் இப்படி
திடீர் என்று இந்தியர்களுக்கு என்று இப்படி அமெரிக்க அரசு விதியை மாற்றுவது ஏன் என்று பலருக்கும் புரியவில்லை. ஆனால் இதன் மூலம் இனி அமெரிக்கா விசா பெறுவது எளிதாகும். பல லட்சம் பேர் இதன் மூலம் வேலை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,