இவன் என்னடா முத்தம் கொடுத்துட்டு போறான்.. திருடன்னா குத்துவாங்க.. வெட்டுவாங்க.. இது புதுசா இருக்கே
திருடன் ஒருவன் பாட்டிக்கு முத்தம் தந்துவிட்டு போயுள்ளான்
Recommended Video
பிரேசிலியா, பிரேசில்: பிரேசில் நாட்டில் ஒரு நூதன சம்பவம் நடந்துள்ளது. அதாவது திருட வந்த இடத்தில் பாட்டிக்கு ஒரு திருடன் முத்தமிட்ட சம்பவம்தான் அது.
பிரேசில் நாட்டில் உள்ள அமரான்டே என்ற இடத்தில் பார்மசி ஒன்று உள்ளது. அந்த பார்மசி கடைக்கு ராத்திரியில் 2 பேர் திருட வந்துள்ளனர்.
முகமூடி அணிந்து வந்த அந்த இருவரும் கடையில் இருந்த கடை உரிமையாளர் சாமுவேல் அல்மெடியாவிடம் நாங்க திருட வந்துள்ளோம் என்று கூறி அவரை அமைதியாக அமரச் சொன்னார்கள். அக்கடையில் அப்போது கடை உரிமையாளர் தவிர ஒரு பாட்டியும் ஏதோ மருந்து வாங்க வந்திருந்தார்.
அதிர்ச்சி
பின்னர் ஒரு திருடன் பாட்டிக்கு பக்கத்தில் நின்று கொள்ள இன்னொருவன் உள்ளே போய் பணம் உள்ளிட்டவற்றை எடுக்க ஆரம்பித்தான். அப்போது பாட்டி என்ன நினைத்தாரோ திருடனிடம் தன்னிடமிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தார். இதைப் பார்த்த திருடன் அதிர்ச்சி அடைந்தான்.
மறுத்தான்
பின்னர் பாட்டியை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டு, நீங்க அமைதியா இருங்க. உங்க கிட்ட நான் திருட மாட்டேன் என்று கூறி பாட்டியிடமிருந்து பணத்தை வாங்க மறுத்து விட்டான்.
வைரல் வீடியோ
அதன் பின்னர் கடையில் கிடைத்த 1000 டாலர் பணத்துடனும், சில பொருட்களை எடுத்துக் கொண்டும் இரு திருடர்களும் போய் விட்டனர். திருட வந்த இடத்தில் பாட்டிக்கு முத்தம் கொடுத்த திருடன் இப்போது பிரேசில் நாட்டில் பிரபலமாகி விட்டான். இந்த வீடியோவும் வைரலாகப் பரவி வருகிறது.
முத்தமா?
ஆனாலும் போலீஸார் விடுவார்களா என்ன.. இப்போது அந்த குசும்புக்கார திருடனையும், அவனது கூட்டாளியையும் தேடி வருகின்றனர். இதுவரை சிக்கவில்லையாம். சிக்கினால் கண்டிப்பாக போலீஸாரும் முத்தம் தருவார்களா என்பது சந்தேகம்தான்!