இந்திய பேட்ஸ்மேன்களின் இன்றைய நிலையை சொல்ல இந்த ஒரு மீம் போதும்!
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய பந்து வீச்சாளர்கள் ஒவ்வருமே அசத்தி இந்த போட்டியை உயிர்ப்போடு வைத்திருந்தனர். ஆனால் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சோடை போய்விட்டனர். ஓப்பனிங், மிடில் ஆர்டர் என எல்லாமே இரு இன்னிங்சுகளிலும் பெரும் சரிவை சந்தித்தது.
கோஹ்லி முதல் இன்னிங்சில் 149 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 51 ரன்களும் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர்.
ஹர்திக் பாண்ட்யா 22 மற்றும் 31 ரன்களை முறையே, முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் எடுத்தார். இதன் மூலம், இந்திய பேட்ஸ்மேன்களில் கோஹ்லியை தவிர்த்து இரு இன்னிங்சுகளில் சேர்த்து 50 ரன்களையாவது கடந்த ஒரே பேட்ஸ்மேன் பாண்ட்யாதான்.
Then - Now #ENGvIND pic.twitter.com/nLRE8whfV2
— ᴋᴀᴘᴛᴀᴀɴ (@KaptaanFearless) August 4, 2018
கோஹ்லியோ இரு இன்னிங்சுகளிலும் சேர்த்து 200 ரன்கள் எடுத்துள்ளார். முன்பு சச்சின், கங்குலி, சேவாக், டிராவிட், லட்சுமணன் ஆகிய ஐவர் டெஸ்ட் தொடர்களின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களாக ஒரே நேரத்தில் சோபித்தனர். ஆனால், இப்போது கோஹ்லியை தவிர்த்து டெஸ்ட் ஆட குவாலிட்டி பேட்ஸ்மேன் அணியில் இல்லையே என்று கேட்கிறது இந்த மீம்.