1 வருடத்திற்கு பின் சுதந்திரம்.. 3 இந்திய இன்ஜினியர்களை விடுதலை செய்த தாலிபான்.. அதிரடி நடவடிக்கை!
தாலிபான் மூலம் கடத்தப்பட்ட இந்தியாவை சேர்ந்த 7 இன்ஜினியர்களில் 3 இன்ஜினியர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காபூல்: தாலிபான் மூலம் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட இந்தியாவை சேர்ந்த 7 இன்ஜினியர்களில் 3 இன்ஜினியர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பணியாற்றிக்கொண்டு இருந்த இந்திய இன்ஜினியர்கள் கடந்த 2018ம் வருடம் மே மாதம் தாலிபான்கள் மூலம் கடத்தப்பட்டனர். மொத்தம் 8 பேர் பாஹ்லான் பகுதியில் கடத்தப்பட்டனர். ஆனால் தாலிபான் அமைப்பின் எந்த பிரிவு இந்த கடத்தலை செய்தது என்று விவரம் வெளியாகவில்லை.
இதற்கு முறையாக தாலிபான் அமைப்பின் எந்த பிரிவும் உரிமை கோரவில்லை. இந்த நிலையில் இந்த 7 பேரில் ஒருவர் சில மாதங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டார். மீதம் உள்ள ஆறு பேரில் 3 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
11 தாலிபான்களின் விடுதலைக்கு மாற்றாக இவர்கள் மூன்று பேரை தாலிபான் விடுதலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தாலிபான் அமைப்பின் முக்கிய தலைவர்களான ஷேக் அப்தூர் ரஹீம், மவ்லாவி அப்தூர் ரஷீத் ஆகியோர் உட்பட 11 தாலிபான் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளிக்கு முந்தைய, பிந்தைய நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிப்பு.. சோகத்தில் மாணவர்கள்
ஆனால் இவர்களை ஆப்கான் ராணுவம் விடுதலை செய்ததா, அமெரிக்க ராணுவம் விடுதலை செய்ததா என்று தகவல் வெளியாகவில்லை. அதேபோல் தாலிபான்கள் எந்த பகுதியில் இந்த விடுதலையை செய்தனர். தாலிபான் அமைப்பின் எந்த பிரிவு இந்த சமாதான நடவடிக்கையை செய்தது என்றும் விவரம் வெளியாகவில்லை.
விடுதலை செய்யப்பட்ட இந்தியர்கள் குறித்த முழு விபரம் இன்னும் வெளியாகவில்லை. தாலிபான் சார்பாக விடுதலை செய்யப்பட்ட 11 தாலிபான் குறித்த அறிக்கை மட்டும் வெளியாகி உள்ளது. தாலிபான் மற்றும் அமெரிக்க அரசு இடையே சமாதான பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இதில் இடையில் சில பிணக்கம் ஏற்பட்டது.
தற்போது 3 இந்தியர்களின் விடுதலை இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.