ஒரு பூமியவே நம்மாள சமாளிக்க முடியலை.. இதுல 3 பூமியை புதுசா கண்டுபிடிச்சிருக்காங்கலாம்!
நியூயார்க்: பூமியைப் போலவே உயிரினங்கள் வாழத் தகுதியான 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியைப் போன்றே உயிர்கள் வாழக்கூடிய புதிய கிரகங்கள் உள்ளனவா அவற்றில் வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கின்றனரா என்பது குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பூமியிலிருந்து 21 ஒளி ஆண்டுகள் தொலைவில், பூமியைப் போலவே 3 புதிய கிரகங்கள் இருப்பது அதிநவீன தொலைநோக்கி மூலம் தெரிய வந்துள்ளது.
அதிநவீன டெலஸ்கோப் மூலம்...
ஸ்பெயினில் உள்ள ஒரு தீவில் அமைக்கப்பட்டுள்ள ஹார்ப்ஸ் என்ற அதிநவீன டெலஸ்கோப்பான ‘ மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பூமி சூரியனைச் சுற்றி வருவது போலவே, 3 கிரகங்களும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப் பட்டது.
புதிய கிரகங்கள்...
இந்தப் புதிய கிரகங்களுக்கு ‘எச்டி 219134' எனப் பெயரிடப் பட்டுள்ளது. மேலும் இந்தப் புதிய கிரகங்களில் பூமியைப் போன்றே மேற்பரப்பு அடர்த்தியுடன் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மனிதர்கள் வாழத் தகுதி...
சூரியனிடமிருந்து பூமி அதிக நெருக்கத்திலும் இல்லாமல், தொலைவிலும் இல்லாமல் சரியான தொலைவில் இருப்பது போலவே, இந்தக் கிரகங்களும் அதன் நட்சத்திரத்தில் இருந்து சரியான தொலைவில் இருப்பது தெரிய வந்துள்ளது.
தண்ணீர், காற்று
இதனால், இவற்றில் மனிதர்கள் வாழ்வதற்கான காற்று, நீர் போன்றவை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
வெறும் கண்களாலேயே...
அதிக வெளிச்சத்துடன் காணப்படும் இந்தப் புதிய கிரகங்களை இரவு நேரங்களில் வெறும் கண்களாலேயே காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.