உம் அல் குவைனில் தம்பே குழுமத்தின் சார்பில் புதிய குடும்ப மருத்துவ நிலையம் திறப்பு
உம் அல் குவைன்: அமீரகத்தில் உள்ள உம் அல் குவைனில் தம்பே குழுமத்தின் சார்பில் புதிய குடும்ப மருத்துவ நிலையம் திறப்பு விழா 14.10.2015 புதன்கிழமை காலை நடைபெற்றது. விழாவிற்கு தம்பே குழுமத்தின் நிறுவன தலைவர் தம்பே முகைதீன் தலைமை வகித்தார்.
உம் அல் குவைன் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ராஷித் பின் சவுத் பின் ராஷித் அல் முல்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் புதிய குடும்ப மருத்துவ நிலையத்தை திறந்து வைத்தார். அவர் அந்த மருத்துவ நிலையத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் பார்வையிட்டார். அவர் தம்பே குழுமத்தின் மருத்துவ சேவைகளை பாராட்டினார்.
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரண்டு ஆண்டுகளில் மேலும் பல மருத்துவ நிலையங்கள் திறக்கப்படும் என தம்பே முகைதீன் தெரிவித்தார். தற்போது துபாய், அஜ்மான், ஷார்ஜா, ராசல் கைமா மற்றும் உம் அல் குவைன் ஆகிய இடங்களில் இந்த மருத்துவ நிலையங்கள் உள்ளன.
இந்த விழாவினையொட்டி இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்டு 600 பேர் பயன்பெற்றனர்.
இந்த விழாவில் தம்பே குழுமத்தின் அக்பர் மொய்தீன் தம்பே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.