விண்ணில் ஏவிய 10 நொடியில் திக்.. நடுவானில் ராக்கெட்டில் விழுந்த இடி.. அடுத்து நடந்த ஷாக் நிகழ்வு!
ரஷ்யாவில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்றில் இடி விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
மாஸ்கோ: ரஷ்யாவில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்றில் இடி விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு காலத்தில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது அந்த இடத்தை அமெரிக்காவும், தனியார் நாடுகளும் பிடித்துவிட்டது.
ஆனால் இப்போதும் கூட ரஷ்யாதான் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய புதிய அத்தியாவசிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி துறை புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
என்ன நடந்தது
ரஷ்யாவின் சோயுஸ் 2.1பி ராக்கெட் இன்று அதிகாலை பிளஸ்டெக் விண்வெளி ஏவுதள பகுதியில் இருந்து ஏவப்பட்டது. இதில் க்ளோனாஸ் எம் நேவிகேஷன் செயற்கைகோள் இருந்தது. சரியான திட்டமிடலுடன் இந்த ராக்கெட் முறையாக ஏவப்பட்டது.
|
ஆனால் மோசம்
ஆனால் ராக்கெட் விண்ணில் பாய தொடங்கிய 10வது நொடியில் அந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. திடீர் என்று ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் ராக்கெட் மீது மின்னல் தாக்கி இடி விழுந்தது. ராக்கெட் நடு வானில் இருக்கும் போது அதன் மீது இப்படி இடி விழுந்து இருக்கிறது.
|
வீடியோ
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. எதிர்பாராத காலநிலை மாற்றம் காரணமாக இப்படி நிகழ்ந்ததாக கூறுகிறார்கள். இந்த வீடியோ பார்க்கவே உறைய வைக்கும் வகையில் அதிர்ச்சியானதாக உள்ளது.
ஆனால்
ஆனால் இதனால் ராக்கெட்டிற்கு எதுவும் ஆகவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. சோயுஸ் 2.1பி ராக்கெட் திட்டமிட்டபடி 3 மணி நேரம் பயணித்தது. அதன்படி திட்டமிட்டபடி க்ளோனாஸ் எம் நேவிகேஷன் செயற்கைகோள் அதன் இடத்தில் நிறுத்தப்பட்டு, தற்போது அது செயல்பட தொடங்கி உள்ளது. மின்னலுக்கு பின்பும் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.