அபுதாபியில் நடந்த மாபெரும் நல்லிணக்க நிகழ்ச்சி
அபுதாபி: அபுதாபி தமுமுக சார்பில் மாபெரும் நல்லிணக்க நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி மாலை 7.00 மணியளவில் சலாம் ஸ்ட்ரீட் அரப் உடுப்பி அரங்கத்தில் தமுமுகவின் அபுதாபி மண்டல பொருளாளர் அபுல்ஹசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அபுதாபி அய்மான் சங்க பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி. ஹமீது அவர்கள், அபுதாபி தமிழ் சங்க தலைவர் ரெஜினால்டு அவர்கள், இந்தியன் முஸ்லிம் ஃபோரம் தலைவர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
தமிழகத்திலிருந்து வருகை புரிந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் கோவை செய்யது அவர்கள் சமுதாய நல்லிணக்கம் மற்றும் சேவை அரசியல் பற்றி தமது ஆழமான சிந்தனைகளை சிறப்புரையாக வழங்கினார். இந்நிகழ்ச்சியை அபுதாபி மண்டல மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் அல் அமீன் அவர்கள் தொகுத்து வழங்கினார். அபுதாபி மண்டல தமுமுக செயலாளர் சபியுல்லாஹ் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிவுற்றது.
இந்நிகழ்ச்சியில் அபுதாபி வாழ் தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.