For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஹ்ரைனில் குமரி மாவட்ட மீனவர் சுட்டுக் கொலை: கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

By Siva
Google Oneindia Tamil News

மனாமா: பஹ்ரைன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் தாமஸ் கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்தவர் தாமஸ். அவர் பஹ்ரைனில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார். அவர் வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் அவரை தாக்கி சுட்டுக் கொலை செய்தனர்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் கடற்கொள்ளையர்கள் பஹ்ரைன் கடல் பகுதியில் ஒரு படகை பறிமுதல் செய்தனர். முன்னதாக அவர்கள் படகோட்டியை இரண்டு முறை சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஹ்ரைனில் தாமஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Thomas, a TN fisherman was shot dead by pirates in Bahrain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X