அமெரிக்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் மனைவியும் கைது
Recommended Video
சிரியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதியின் மனைவியையும் கைது செய்துள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
சிரியாவில் பதுங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பிடிபடாமல் இருக்க கடந்த 26ஆம் தேதி இடுப்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்.
உடன் தனது 3 குழந்தைகளையும் வைத்துக் கொண்டதால் அவர்களும் இறந்தனர். இந்த நிலையில் அவரது சகோதரி ராஸ்மியா அவாத், அவரது கணவர், உறவினர்கள் ஆகியோரை துருக்கி அரசு கைது செய்தது. ராஸ்மியா ஐஎஸ் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவிற்கு உளவு பார்த்த டிவிட்டர் முன்னாள் ஊழியர்கள்.. அமெரிக்காவில் சிறையில் அடைப்பு
இந்த நிலையில் பாக்தாதியின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு அதிபர் டாயிப் எர்டகன் தெரிவித்துள்ளார். பாக்தாதிக்கு 4 மனைவிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாக்தாதியின் எத்தனையாவது மனைவியை துருக்கி கைது செய்தது என்ற விவரம் தெரியவில்லை.