For Daily Alerts
Just In
துருக்கியில் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் பலி
இஸ்தான்புல்: துருக்கியில் 5 டன் வெடிப் பொருட்களுடன் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.
துருக்கி நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள செம்டின்லி நகரில் உள்ள ராணுவ காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச் சாவடியில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
நேற்று வழக்கமான வாகன சோதனை நடைபெற்றபோது அவ்வழியாக வந்த ஒரு கார் வெடித்து சிதறியது. இதில் 10 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 8 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தலைநகர் இஸ்தான்புல் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துருக்கி பிரதமர் பின்பாலி இல்ட்ரிம், 5 டன் அளவிலான வெடிப்பொருட்களை கொண்டு நேற்றைய கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
Comments
English summary
18 dead in car bombing attack at Turkish military checkpoint
Story first published: Monday, October 10, 2016, 18:44 [IST]