For Daily Alerts
Just In
நடுவானில் வந்த வெடிகுண்டு மிரட்டல்... துருக்கி விமானம் தரையிறக்கம்
அங்காரா: நியூயார்க்கிலிருந்து இஸ்தான்புல் சென்ற துருக்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
துருக்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர்பஸ் எ-330 விமானம் நியூயார்க்கிலிருந்து இஸதான்புல் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் தனிமைப்படுத்தப்பட்டு கனடாவில் உள்ள ஹாலிபெக்ஸ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த 226 பயணிகள் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர். விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்களைக் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
English summary
A Turkish Airlines Airbus A330 jet flying from New York City to Istanbul was returned to mid-air and landed in Halifax, CanadaA Turkish Airlines Airbus A330 jet flying from New York City to Istanbul was returned to mid-air and landed in Halifax, Canada.
Story first published: Sunday, November 22, 2015, 14:15 [IST]