பலான பட காட்சிகளை அரங்கேற்ற சொன்ன கணவர்.. கழுத்தறுத்து கொன்ற மனைவி!
இஸ்தான்புல்: துருக்கியை சேர்ந்த 49 வயது பெண்மணி கோனுல், 67 வயதான அவரது கணவரை சமையலறை கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார்.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்: எனது கணவருக்கு வயதானாலும்கூட நிறைய கனவுகளுடன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தேன். முதல் 20 நாட்கள் எனது கணவர் அன்பால் திக்குமுக்காட செய்தார். செக்ஸ் வாழ்க்கையும் திருப்தியாக இருந்தது.
ஆனால் அதன்பிறகுதான், எனது கணவரின் கொடூர முகம் தெரியவந்தது. அவர் ஒரு செக்ஸ் பட பைத்தியம். விடிய விடிய ஜெர்மன் ஆபாச வீடியோக்களை போட்டு கண் முழித்து பார்த்துக் கொண்டிருப்பார்.
விடிந்ததும் விடியாததுமாக, என்னை அழைத்து, ஆபாச வீடியோவில் செய்வதைப்போல செய்ய வேண்டும் என்று தொல்லை கொடுப்பார். சில விஷயங்களை செய்ய அறுவறுப்பாக இருக்கும் என்பதால் நான் மறுப்பேன். ஆனால் அவரோ கோபத்தில் அடித்து உதைத்து அவரது ஆசையை தீர்த்துக்கொள்வார்.
இனியும் இந்த வேதனையை பொறுத்துக்கொள்ள முடியாதென்று முடிவெடுத்து, தகராறு செய்தேன். வாக்குவாதம் முற்றிய நிலையில், தடியால் அவரை அடித்தேன். மயக்கம்போட்டு விழுந்ததும், கிச்சனில் இருந்த கத்தியால் கழுத்தையறுத்து கொலை செய்தேன்.
இவ்வாறு கோனுல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
துருக்கியில் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த வன்முறையால் கொலையாகிறார்கள். சிறிய எண்ணிக்கையிலான பெண்கள் தங்களை கொடுமைப்படுத்தும் கணவர்களை கொல்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.