பங்குகள் சரிவு... சீனா, சௌதியை அட்டாக் செய்யும் ட்விட்டர்
பெய்ஜிங்: சீனா, சௌதியில் இருந்து மேற்கொள்ளப்படும் அசாதாரண செயல்பாடுகளால் ட்விட்டரின் பங்குகள் 7 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் ஹேக்கர்களால் பெரிய இழப்பை ட்விட்டர் நிறுவனம் சந்தித்துள்ளதாக கூறப்படும் தகவலை அந்நிறுவனம் மறுத்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான ட்ராஃபிக்கைக் கண்டறிந்து வருவதாகவும், பயனர்களின் தொலைபேசியின் குறியீடுகள் மற்றும் முடக்கப்பட்ட கணக்குகளின் விவரங்கள் உட்பட தரவுகளை வெளியிட்டது என பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் ஹேக்கர்கள் ஸ்பான்சருடன் இணைந்து செயல்படுவதாக சந்தேகிக்கிறோம். பயனர் தரவைத் திருட முயற்சி நடக்கிறது. மேலும், தொடர்பில்லாத பிரச்சினையை கிளப்பி விட்டுள்ளனர் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக செய்யப்படும் இது போன்ற நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம். தேவையற்ற ஐபி முகவரிகளை பதிவு செய்துள்ளோம். கலந்தாலோசித்து விரைவில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.