அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்.. அதிர வைத்த 1 மணி நேரம்.. ஜப்பானில் அதிகாலையில் பரபரப்பு!
இன்று அதிகாலை ஜப்பானில் மோசமான அளவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
டோக்கியோ: இன்று அதிகாலை ஜப்பானில் மோசமான அளவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
ஜப்பான் உலகில் அதிகமாக நிலநடுக்கத்தால் பாதிப்பிற்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்றாகும். இந்தோனேசியாவில் ஏற்படும் நிலநடுக்கம் அங்கு எரிமலையை வெடிக்க வைக்கும். ஜப்பானில் ஏற்படும் நிலநடுக்கம் அங்கு சுனாமியை அடிக்கடி ஏற்படுத்துகிறது.
கடந்த வாரம் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் இரண்டு வாரங்களுக்கு முன் பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜப்பானில் இன்று இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காலை 6.30 மணிக்கு ஒரு நிலநடுக்கம் மற்றும் காலை 7.30 மணிக்கு இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் கியூஸு தீவில் உள்ள மியாசாகி நகரத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் கடலுக்கு ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல்: அனல் பறக்கும் ராஜீவ் மீதான புகார்கள்... எல்லாமே 'வாக்கு வங்கி' அரசியல்?
இதனால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை. உயிரிழப்பு குறித்தும் இன்னும் தகவல் வெளியாகவில்லை
ஆனால் அதிக அளவில் வீடுகள், நிறுவனங்கள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவரை இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் முதல் நிலநடுக்கம் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இரண்டாவது நிலநடுக்கம் 6.3 ஆக பதிவாகி இருக்கிறது.