இங்கிலாந்து புயலுக்கு இருவர் பலி: 130 விமானங்கள் ரத்து
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்தை புயல் தாக்கியதில் இளம்பெண் உட்பட இருவர் பலியானதான தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தாக்கியிருக்கும் புயலினால் தென் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள நகரமான கெண்ட்டில் மரம் உடைந்து விழுந்ததில், ஒரு இளம்பெண்ணும், வாட்போர்டில் ஒருவரும் பலியாகி யுள்ளனர். மேலும், புயல் தாக்கத்தால் சுமார் இரண்டு லட்சத்து இருபதாயிரம் வீடுகள் மின் துண்டிப்பு பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.
130 விமானங்களும் மற்றும் பல ரயில்களும் புயலினால் ரத்து செய்யப் பட்டுள்ளன. எதிர்பார்த்ததைப் போலவே, புயல் சுமார் 99 மைல் வேகத்தில் வீசியதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயலின் தாக்கத்தால் 30 முதல் 40 செமீ வரை கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications