காசுக்காக ஐபிஎல் ஆடுகிறார் மோர்கன்.. இந்தியாவிடம் மீண்டும் வாலாட்டும் இங்கி. திமிர் பத்திரிகையாளர்
லண்டன்: வங்கதேச சுற்றுப் பயணத்தில் பயணத்தை புறக்கணிக்க இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணி தலைவர் இயோன் மோர்கன் முடிவெடுத்துள்ள நிலையில், இந்தியாவுக்கு மட்டும் பணத்துக்காக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மோர்கன் செல்வதாக இங்கிலாந்தின் பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கன் குற்றம்சாட்டியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்லாத நிலையில், அதை கேலி செய்து, சர்ச்சைக்குள்ளானவர் பியர்ஸ் மோர்கன். இவரது டிவிட்டுக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பதிலடி டிவிட் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இன்னும் உலக கோப்பையை ஒருமுறையும் வென்றதில்லை என கேலி செய்தார் சேவாக்.
தங்கம் வெல்ல முடியாது
இதற்கும் சளைக்காமல் பதிலளித்த மோர்கன், நாங்கள் உலக கோப்பையை வென்றாலும் நீங்கள் தங்கம் வெல்ல முடியாது என கூறியிருந்தார். இதற்கு ஹாஹாஹா என சிரிப்பை பதிலாக அளித்தார் சேவாக். மேலும் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் மோர்கன் பற்றி பேச அழைப்பு வந்ததை மறைமுகமாக குறிப்பிட்ட சேவாக், அந்த நபர் அதற்கு தகுதியானவர் இல்லை எனவும் டிவிட் செய்திருந்தார்.
கரிபூசிய மாரியப்பன்
இந்நிலையில், மோர்கன் முகத்தில் மாரியப்பன் தங்கவேலு கரி பூசி பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். இதனால் வாய்ச்சவடாலுக்கு வேறு டாபிக்கை எடுத்து இந்தியாவை வம்புக்கு இழுத்துள்ளார் மோர்கன்.
|
இந்தியாவில் தீவிரவாதமாம்
அதாவது, இங்கிலாந்து கேப்டன், இயோன் மோர்கன் வங்கதேச சுற்றுப் பயணத்தை தவிர்த்ததை காரணமாக வைத்து இந்தியாவிடம் வாலாட்டி டிவிட் போட்டுள்ளார் பியர்ஸ். தீவிரவாத தாக்குதல் அச்சத்தால் வங்கதேச பயணத்தை இயோன் மோர்கன் தவிர்க்கிறார். ஆனால் காசுக்காக இந்தியாவின் ஐபிஎல் தொடரில் ஆடுகிறார். வங்கதேசத்துக்கும், இந்தியாவுக்கும் பெரிய வித்தியாசம் என்ன உள்ளது என, வாலாட்டியுள்ளார் பியர்ஸ்.
ஐரோப்பாவைவிட ஓ.கே
இதை இந்திய நெட்டிசன்கள் கண்டித்து வருகிறார்கள். ஐரோப்பாவைவிட தீவிரவாத அச்சத்தில் இருந்து விடுபட்டு பாதுகாப்பாக உள்ள நாடு இந்தியாதான் என்றும், எனவேதான், பாதுகாப்பு புகலிடமாக இயோன் மார்கன் ஐபிஎல் ஆட இந்தியா வருவதாகவும் கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.