For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷாக்கிங்.. நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமிற்கு கொரோனா பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி!

Google Oneindia Tamil News

காராச்சி: இந்தியாவின் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டடுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Recommended Video

    நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமிற்கு கொரோனா பாதிப்பு

    இந்தியாவை இப்போதும் உலக்கி வரும் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம். மும்பையை ஆட்டிப்படைத்து வந்த தாவுத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் இருக்கிறார். பாகிஸ்தானில் கராச்சியில் இவர் வசித்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.

    1993 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு இவர்தான் காரணம் என்று புகார் உள்ளது. அதேபோல் இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதலுக்கு இவர் காரணமாக இருந்தார்.

    ஜெ.வை ஜெயிலுக்கு அனுப்பிய வக்கீல் வெங்கடராமன் கொரோனாவுக்கு பலி- சு.சுவாமியின் 30 ஆண்டுகால நண்பர்! ஜெ.வை ஜெயிலுக்கு அனுப்பிய வக்கீல் வெங்கடராமன் கொரோனாவுக்கு பலி- சு.சுவாமியின் 30 ஆண்டுகால நண்பர்!

    எங்கே இருக்கிறார்?

    எங்கே இருக்கிறார்?

    இவர் உலக அளவில் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். பாகிஸ்தானில் இவர் பதுங்கி உள்ளார். பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ இவருக்கு ஆதரவு வழங்கி வருகிறது என்று புகார் உள்ளது. ஆனால் இந்த புகாரை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. 2011இல் கராச்சி, பாகிஸ்தானில் நடைபெற்ற இவரின் மகனின் திருமணத்தில் பாகிஸ்தான் உயரதிகாரிகள் கலந்து கொண்டது பெரிய சர்ச்சையானது .

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    இந்த நிலையில் தாதா தாவுத் இப்ராஹிமிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டடுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அவரின் மனைவி மேஜபீனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று கூறுகிறார்கள். தற்போது தாவுத் இப்ராஹிம் கராச்சியில் இருக்கிறார். அங்கு இருக்கும் ராணுவ மருத்துவமனை ஒன்றில் இவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    சிகிச்சை

    சிகிச்சை

    பாகிஸ்தான் கராச்சியில் இருக்கும் ஐஎஸ்ஐ மையத்தின் தலைவர், ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவரிடம் இந்த தகவலை தெரிவித்தார் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுகுறித்து பாகிஸ்தான் அரசாங்கம் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தாவுத்திற்கு தற்போது ராணுவ மையத்தில் மிக தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    எப்படி வந்தது

    எப்படி வந்தது

    தாவுத்திற்கு அவரின் வீட்டு பணியாளர்கள் மூலம் கொரோனா வந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அவரின் வீட்டு பணியாளர்கள் சிலர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் வீட்டு பணியாளர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். தாவுத் இப்ராஹீமை பாகிஸ்தான் இத்தனை நாட்களாக துருப்பு சீட்டு போல பயன்படுத்தி வந்தது.

    English summary
    Underworld Don Dawood Ibrahim gets Coronavirus with his wife Karachi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X