For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு- 5 பேர் பலி

அமெரிக்காவில் பத்திரிகை அலுவலகத்துக்குல் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் கேப்பிட்டல் கெஜட் பத்திரிகை அலுவலகத்துக்குல் நுழைந்த மர்ம நபர் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னபோலீஸில் ஆனி அருண்டேல் கவுண்ட்டியில் கேப்பிட்டல் கெஜட் பத்திரிகை அலுவலம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்குள் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

US: 5 killed in multiple shooting at The Capital newspaper in Marylands Annapolis

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் பத்திரிகை அலுவலகம் இயங்கிய அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றினர். இத்தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயமடைந்தனர்.

இப் பயங்கர துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர். புளோரிடாவின் பார்க்லேண்ட் பள்ளிக் கூடத்தில் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 பேரும் டெக்சாஸ் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூட்டில் 10 பேரும் பலியாகி இருந்தனர்.

இந்த நிலையில் பத்திரிகை அலுவலக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
At least five people were killed while several others got injured after a shooting occurred at the Capital Gazette in Anne Arundel County.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X