உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 41 லட்சத்தை தாண்டியது; உயிரிழப்பு எண்ணிக்கை 2,83,846
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியிருக்கிறது. மேலும் கொரோனாவால் உலக நாடுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,83,846 ஆகவும் உயர்ந்துள்ளது.
Recommended Video
உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக மோசமாக இருந்து வருகிறது. இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 13,67,638 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 80,787 பேர் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் 31,855 பேர் மரணித்து உள்ளனர். இத்தாலியில் 30,560 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர். ஸ்பெயினிலும் பிரான்ஸிலும் சுமார் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
ரஷ்யாவில் கொரோனாவின் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் இதுவரை மொத்தம் 2,09,688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஸ்பெயினில்தான் அதிகபட்சமாக 2,64,663 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு- இயல்பு நிலை திரும்புகிறது- டீ கடைகளும் திறப்பு
பிரேசில் நாட்டில் கொரோனா மரணங்கள் 11,123 ஆகவும் ஜெர்மனியில் 7,569; ஈரானில் 6,640 ஆகவும் இருக்கிறது. நெதர்லாந்தில் 5,440 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர்.