சொன்னபடி செய்த அமெரிக்கா.. எல்லைக்கு விமானப்படையை அனுப்பியது.. சீனாவிற்கு எதிராக ஷாக்கிங் மூவ்!
பெய்ஜிங்: சீனாவிற்கு எதிராக தற்போது அமெரிக்கா சொன்னபடி அதிரடியாக செயல்பட்டு உள்ளது. சீனாவிற்கு எதிராக அந்நாட்டு எல்லைக்கு தற்போது அமெரிக்கா விமானப்படையை அனுப்பி உள்ளது.
Recommended Video
இந்தியா சீனா இடையில் லடாக் எல்லையில் மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் தலையிட்டுள்ளது. சீனா அண்டை நாடுகள் உடன் அத்துமீறி வருகிறது. அமெரிக்கா இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.
சீனாவிற்கு எதிராக அமெரிக்கா படைகளை அனுப்பும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அமெரிக்கா வெளிப்படையாக தெரிவித்தது.
எல்லை மோதல்
இந்தியாவுடன் எப்படி சீனா எல்லையில் மோதி வருகிறதோ அதேபோல் தென் சீன கடல் எல்லையிலும் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. அங்கு வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உடன் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. தென் சீன கடல் எல்லையில் இருக்கும் எண்ணெய் வளத்தை அபகரிக்கும் வகையில் சீனா அங்கு அத்துமீறி வருகிறது.
போர் கப்பல்
முக்கியமாக இங்கு சீனா தனது போர் கப்பல்களை குவித்து வருகிறது. அண்டை நாடுகளுக்கு எதிராக சீனா தொடர்ந்து அங்கு நவீன போர் கப்பல்களை குவித்து வருகிறது. இன்னொரு பக்கம் சீனாவிற்கு எதிராக தற்போது அங்கே அமெரிக்கா களமிறங்கி உள்ளது. அங்கே சீனாவிற்கு எதிராக கடந்த இரண்டு மாதமாக அமெரிக்கா சூப்பர் கேரியர் வகை போர் காப்பகளை அங்கு நிறுத்தி சீனாவை கட்டுப்படுத்தி வருகிறது.
விமான படையா
இந்த நிலையில்தான் சீனாவின் கொட்டத்தை அடக்கும் வகையில் எல்லைக்கு படைகளை அனுப்புவோம் என்று அமெரிக்கா கூறியது. தற்போது அமெரிக்கா கூறியது போலவே தென் சீன கடல் எல்லைக்கு அமெரிக்கா தனது விமானபடையை அனுப்பி உள்ளது . அமெரிக்கா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அந்த கடல் பகுதியில் தற்போது அமெரிக்காவின் USS Ronald Reagan மற்றும் USS Nimitz ஆகிய போர் கப்பல்கள் ரோந்து செய்து வருகிறது.
அதிரடி
இந்த கப்பல்கள் இரண்டிலும் 15க்கும் அதிகமான போர் விமானங்கள் இருக்கிறது. கப்பற்படையின் இந்த போர் விமானங்களுடன் சேர்ந்து அமெரிக்காவின் விமானப்படையும் அங்கே களமிறங்கி உள்ளது. தென் சீன கடல் எல்லையில் மிக தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது. ஜெர்மனியில் பின்வாங்கப்பட்ட அமெரிக்கா விமானப்படை மொத்தமாக இந்த பகுதிக்கு திருப்பப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
தொல்லை
சீனாவிற்கு எதிராக கடல் ரீதியாகவும், வானத்தில் இருந்தும் சரியாக தாக்குதல் நடந்த இந்த படைகளை களமிறக்கி உள்ளோம். இவர்கள் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகினார்கள். இரண்டு போர் கப்பல்களும் அதில் இருக்கும் விமானங்களும் அமெரிக்காவிற்கு முழுமையான பலத்தை கொடுக்கும். அதேபோல் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் போர் கப்பல்களும் நமக்கு ஆதரவாக உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ஷாக்
சீனா இதனால் கடுமையாக அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. அமெரிக்காவின் இந்த மூவை சீனா கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இதனால் தற்போது இதே இடத்தில் சீனாவும் போர் பயிற்சிகளை செய்து வருகிறது. அங்கு சீனா போர் விமானங்களையும், போர் கப்பல்களையும் குவித்து தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.