அட்டூழியம் செய்த சக மாணவர்களுக்கு 'உவ்வே' கப் கேக் மூலம் “ஆப்பு” வைத்த மாணவி
கலிபோர்னியா: கலிபோர்னியாவைச் சேர்ந்த 10 வயது மாணவி ஒருவர் தன்னுடைய பள்ளியில் அட்டூழியம் செய்தவர்களுக்கு கப் கேக் மூலம் நூதனமான முறையில் ஆப்பு வைத்துள்ளார்.
அவர்களிடம் கப் கேக்குகளைக் கொடுத்து சாப்பிடச் சொன்ன அவர் பின்னர், அந்த கப் கேக்குகள் ஆண்களின் விந்து, மலம், பெண்களின் மர்ம உறுப்பில் உள்ள முடி ஆகியவற்றால் செய்யப்பட்டது என்று கூறி அவர்களை டென்ஷன்படுத்தி விட்டார்.
ஆனால், இப்படி பீதி ஏற்படுத்திய அந்த 10 வயது சிறுமி யாரென்று யாருக்கும் தெரியவில்லை.ஆனால், அவர் பேக்கர்ஸ்பீல்ட்சில் உள்ள சென்ட்டினல் பள்ளியைச் சேர்ந்த மாணவிதான் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.
இந்த கப்கேக்களை சாப்பிட்ட மாணவர்கள் பல்வேறு வயிற்று உபாதைகளுக்கு உள்ளானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
சுகாதார அதிகாரிகளால் கூட அந்த கப்கேக்களில் என்ன பொருட்கள் சேர்க்கப் பட்டிருந்தது என்று கண்டறிய முடியவில்லை. மேலும், மீதி இருந்த கப் கேக்களும் அழிக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்து விசாரித்த பேக்கர்பீல்ட் போலீசார், அந்த கேக்களில் அப்படி எதுவும் கலக்கப்படவில்லை என்று அடித்துக் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, அப்பள்ளியானது இனிமேல் வெளியில் இருந்து கொண்டுவரும் உணவுப் பொருட்களுக்கு அனுமதி இல்லை என்ற விதிமுறையை பிறப்பித்துள்ளது.