விழி இழந்த கண்களுக்கு ஒளி தரும் உயிறற்றவரின் கண் செல்கள்..
லண்டன்: இறந்தவரின் கண் செல்கள் மூலம் பார்வையற்றோர்க்கு பார்க்கும் திறனை வழங்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கண்ணுக்கு கண்ணாக:
பிறவியிலேயே பார்வையை இழந்தவர்களுக்கு உயிரற்றவரின் கண்களின் செல்கள் மூலம் முழுவதுமாக இல்லாவிட்டாலும் பொருட்களை அடையாளம் கண்டறியும் அளவுக்குத் திறனை வழங்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஸ்டெம் செல் மாற்று:
உயிரிழந்தோரின் கண்களின் பின் உள்ள ஒருவகையான செல்கள் மூலம் பார்வையற்ற எலிகளுக்கு அடையாளம் காணும் திறனை உருவாக்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இதனை " ஸ்டெம் செல் மாற்று மருந்து " என இதற்குப் பெயரிட்டுள்ளனர்..
பார்வை திரும்பி வருமே:
இதனை பார்வையற்றோர்க்கு வழங்கும்போது அவர்களால் முழுப்பார்வையை திரும்ப பெற முடியாவிட்டாலும் பொருட்களை எளிதாக இனம் கண்டறிய முடியும் என லண்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முல்லர் கிளையலின் மாயம்:
மேலும் இதற்கான ஆராய்ச்சி இன்னும் மூன்று வருடங்களில் தொடங்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.இதற்கு கண் பின்புற செல்லான "முல்லர் கிளையல்" பயன்படுகிறது.
புதிய மைல்கல்:
"இந்த "முல்லர் கிளையல்" செல் மாற்று கண்டுபிடிப்பானது பார்வைகுறைபாடுகளுக்கான சிகிச்சையில் மைல்கல்லாக அமையும்"என்று லண்டனின் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பால் கோல்விலே-நாஷ் கூறியுள்ளார்
இனி இல்லை பார்வையற்ற நிலை:
உடலின் மற்ற செல்களின் பயன்பாட்டை போலவே இக்கண் செல் ஆராய்ச்சியும் வெற்றிபெற்றால் உலகில் பார்வையற்றவர்களே இல்லாமல் செய்துவிட முடியும்.