பாலஸ்தீனரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் பாதுகாப்பு படை: வைரலாகும் வீடியோ
ஜெருசலம்: ஜெருசலத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒருவரை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெருசலத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒருவர் இஸ்ரேலிய பாதுகாப்பு படை அதிகாரிகள் இருவரை கத்தியால் குத்தினார். இதையடுத்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் கேமராமேன் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யூதர் ஒருவரால் பாலஸ்தீனத்தை சேர்ந்த 29 பேர் கொல்லப்பட்டதன் 22வது நினைவு தினத்தன்று ஹெப்ரான் நகரில் பாலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலிய போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர். கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து பாலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாலஸ்தீனர் ஒருவரை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.