2வது மாடியிலிருந்து விழுந்த 2 வயது குழந்தை.. அலேக்காக கேட்ச் பிடித்த 17 வயது சிறுவன்.. வைரல் வீடியோ
Recommended Video
இஸ்தான்புல்: துருக்கி நாட்டில் 2-ஆவது மாடியிலிருந்து விழுந்த குழந்தையை லாவகமாக கேட்ச் பிடித்த 17 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இஸ்தான்புல் நகரில் குழந்தை ஒன்று கீழே விழுந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்ட ஸாபாட் (17) என்பவர் அதே தெருவில் வீட்டின் 2-ஆவது மாடியில் தாய் சமைத்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக பெண் குழந்தை தோஹா முகமது சிக்கிக் கொண்டதை பார்த்துள்ளார்.
பின்னர் அந்த குழந்தை கீழே விழும் அபாயம் உள்ளதை கண்டு உடனடியாக அந்த இடத்துக்கு வந்தார். அப்போது அவர் நினைத்தபடியே குழந்தை விழுந்தது. அப்போது லாவகமாக ஸாபாட் கேட்ச் பிடித்தார்.
இதையடுத்து அங்கு சுற்றியிருந்தவர்கள் ஓடி வந்தனர். எனினும் குழந்தைக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. குழந்தையை லாபகமாக பிடித்து உயிரை காப்பாற்றிய இளைஞரை அப்பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.
குழந்தையின் பெற்றோரும் அவருக்கு 200 துருக்கி லிராஸை கொடுத்துள்ளனர். இந்திய மதிப்பில் சுமார் 2300 ரூபாய் ஆகும். ஸாபாட் அல்ஜீரியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்.