வேகமாக சென்று தாக்கிய ஈரான் ஏவுகணை.. நொறுங்கி விழுந்த உக்ரைன் விமானம்.. அதிர வைக்கும் வீடியோ!
ஈரானில் விழுந்து விபத்துக்கு உள்ளான உக்ரைன் விமானம் ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
Recommended Video
டெஹ்ரான்: ஈரானில் விழுந்து விபத்துக்கு உள்ளான உக்ரைன் விமானம் ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஈரானில் இருந்து பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் இரண்டு நாட்களுக்கு முன் விபத்துக்குள்ளானது. டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 -800 விமானம் புறப்பட்டது. இது உக்ரைன் நாட்டு அரசுக்கு சொந்தமான விமானம் ஆகும்.
விமானத்தில் பயணித்த 170 பேரும் பலியானார்கள். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதலால் நிகழ்ந்து இருக்கலாம் என்று புகார் எழுந்துள்ளது.
சுலைமானியை கொன்ற அமெரிக்காவின் MQ-9 ட்ரோன்.. உலகிலேயே எவ்வளவு பயங்கரமானது தெரியுமா?
|
என்ன வீடியோ
இந்த விமானம் எப்படி விழுந்து நொறுங்கியது என்பது தொடர்பாக ஏற்கனவே வீடியோ வெளியானது. எஞ்சின் தீ பற்றி எரிந்து அப்படியே தரையை நோக்கி வேகமாக வருகிறது. பின் கீழே விழுகிறது. விமானம் விழுந்த நொடியில் பெரிய அளவில் வெடித்து சிதறுகிறது. இந்த சம்பவம் அப்படியே வீடியோவில் பதிவாகி உள்ளது. இதன் மூலம் விமானத்தின் எஞ்சினில் பெரிய அளவில் தீ பிடித்து இருந்தது உறுதியாகி உள்ளது.
என்ன நிலை
இந்த நிலையில்தான் தற்போது இன்னொரு வீடியோ இந்த சம்பவம் குறித்து வெளியாகி உள்ளது. அதில், இந்த விமானம் தானாக விழவில்லை. விமானம் கீழே விழுவதற்கு முன் சிறிய ஒளி கீற்று அதை போய் மோதியுள்ளது. ஈரான் செலுத்திய ஏவுகணைதான் இந்த ஒளி கீற்று.
|
விபத்து
இதுதான் விமானத்தை மோதி இருக்கிறது.மொத்தமாக விமானத்தை அந்த ஏவுகணை தாக்காமல் உரசி சென்றுள்ளது. இதனால் அதன் எஞ்சின் தீ பிடித்து வெடித்து உள்ளது. இதன்பின் விமானம் கீழே விழுந்து சிதறி உள்ளது.
ஏவுகணை தாக்குதல்
இந்த ஏவுகணை தாக்குதலால்தான் ஈரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது. இதனால்தான் 176 பேர் பலியானார்கள். இதனால் தற்போது ஈரான் மாபெரும் பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. இந்த வீடியோவை கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சோதனை செய்து வருகிறது.
சிக்கல்
ஏவுகணை தாக்குதல் மூலம்தான் விமானம் விழுந்து நொறுங்கியது என்று நிரூபிக்கப்பட்டால் அது பெரிய சிக்கலாக முடியும். ஏனென்றால் உக்ரைன் விமானம் விழுந்ததில் 170 அப்பாவி பொதுமக்கள் மரணம் அடைந்தனர். இந்த பழி மொத்தமும் ஈரான் மீதுதான் விழும் என்பது குறிப்பிடத்தக்கது.