ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய 14 வயது சிறுமி ஷாக் அடித்து பலி
ஹனோய்: வியட்நாமில் ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய 14 வயது சிறுமி ஷாக் அடித்து பலியாகியுள்ளார்.
வியட்நாமின் ஹா தின் மாகாணத்தில் உள்ள ஹுவாங் சோன் மாவட்டத்தை சேர்ந்தவர் லீ தி ஜோவன்(14). அவர் ஐபோன் 6 வைத்திருந்தார். செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்குவது சிறுமியின் பழக்கம். இந்நிலையில் சிறுமி செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு படுக்கையில் படுத்து தூங்கியுள்ளார்.
தூக்கத்தில் அவரது கை சார்ஜரின் கேபிள் மீது பட்டதில் மின்சாரம் தாக்கியது. படுக்கையில் சுயநினைவின்றி கிடந்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிர் இழந்தார்.
சார்ஜர் கேபிளில் ஒரு இடத்தில் பிளாஸ்டிக் கவர் பிய்ந்து ஒயர் தெரிந்துள்ளது. அந்த இடத்தில் சிறுமி செலோ டேப்பை ஒட்டியுள்ளார். டேப் ஒட்டப்பட்ட இடத்தில் தான் சிறுமியின் கை பட்டு மின்சாரம் பாய்ந்துள்ளது.
சிறுமியின் மரணம் குறித்து அறிந்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து ஃபேஸ்புக்கில் அவரை பற்றி எழுதி தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அந்த சார்ஜரின் கேபிள் ஐபோன் சார்ஜரின் கேபிளை விட சிறியதாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.