6500 அடி உயரத்திற்கு சூழ்ந்த பிரம்மாண்ட புகை.. இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை!
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Recommended Video
சுலேவேசி: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியை பெரிய அளவில் புகை சூழ்ந்து இருக்கிறது.
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் எரிமலை ஒன்று வெடித்து சிதற தொடங்கியுள்ளது. சுலவேசி தீவில் உள்ள மவுண்ட் சினாபங் எரிமலை இன்று காலை வெடித்து சிதறி கடும் சீற்றத்துடன் சாம்பலைக் கக்கத் தொடங்கி உள்ளது.
2016ல் இருந்தே இந்த எரிமலை வெடிக்கும் நிலையில் இருந்தது. அவ்வப்போது நெருப்புகளை கக்கி வந்தது. இதனால் எந்த நேரத்திலும் நெருப்புக் குழம்பு வெளிப்படும் அபாயம் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று காலை இது வெடித்தது.
இதிலிருந்து பெரிய அளவில் நெருப்பு குழம்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது எரிமலையில் இருந்து வெளிவரும் புகையானது வானில் 6500 அடி உயரத்திற்கு பரவி உள்ளது. இதனால் மக்கள் அங்கு கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
Indonesia's Center for Volcanology and Geological Hazard Mitigation says planes passing through pathway around Mount Sinabung volcano in Sumatra island have been warned to exercise caution as volcanic ashes from the volcano endangers flight - Xinhua news agency. Photo: CBS News pic.twitter.com/pH8TNv5IKw
— NIGHTLINE TV3 (@nightlineTV3) May 7, 2019
எரிமலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், சாம்பல் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முகமூடிகள் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் விமானங்கள் இயக்குவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
41 உயிர்களை பலி கொண்ட ரஷ்ய விமான விபத்திற்கான காரணம்.. விமானி திடுக் தகவல்!
எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் மக்கள் இப்போதே அந்த பகுதியில் இருந்து வெளியேற தொடங்கிவிட்டார்கள்.
இந்த எரிமலை வெடிப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவை பார்க்கவே பதற வைக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது.