கொரோனாவை விட மோசமான புபோனிக் பிளேக்.. கழுத்து, இடுப்பில் கோழி முட்டை சைஸுக்கு வீங்குமாம்!
பெய்ஜிங்: சீனாவின் வடக்கு பகுதியில் வேகமாக பரவி வரும் புபோனிக் பிளேக் என்ற தொற்றுநோய் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது உள்ளிட்டவைகள் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.
Recommended Video
கோவ்ட் மாகாணத்தில் மங்கோலியாவுக்குள்பட்ட பயன்னார் பகுதியில் இருவருக்கு புபோனியா பிளேக் நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. 27 வயது மற்றும் 17 வயதுடைய சகோதரர்கள் இருவரும் மர்மோத் எனப்படும் ஒரு வகை அணிலின் கறியை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இந்த அணில் கறியை பொதுமக்கள் யாரும் உண்ண வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலில் புபோனிக் பிளேக் நோய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இது மாஸ்க்கா.. இதுக்கு அந்த பிளேக் நோயே பரவாயில்லை போலயே.. பீதியை கிளப்பிய அந்த காலத்து டாக்டர்கள்!
அரிதானது
புபோனிக் பிளேக் நோய் மிகவும் அரிதான ஒன்று. இது உண்ணிகள், ஈக்கள், கொரித்து தின்றும் உண்ணிகள் ஆகியவற்றால் பரவும் வாய்ப்பு அதிகம். இது விலங்குகளுக்கான நோய் என்பதால் அவை மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எளிதில் பரவும். ஏற்கெனவே இந்த நோய் பாதித்த உண்ணிக்கள் மற்ற விலங்கையோ மனிதர்களையோ கடிக்கும் போது பரவிவிடும்.
நிமோனிக் பிளேக்
ஏற்கெனவே பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளின் உடலில் இருந்து வெளியாகும் திரவம் மூலமும் பரவும். இந்த பிளேக்கை யெர்சீனியா பெஸ்டிஸ் என்ற ஒரு வகை பாக்டீரியா பரப்புகிறது. செப்டிசீமிக் பிளேக் மற்றும் நிமோனிக் பிளேக் ஆகிய இரு பிளேக் நோய்களும் யெர்சீனியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் பரவும்.
நிமோனிக் பிளேக்
ஏற்கெனவே பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளின் உடலில் இருந்து வெளியாகும் திரவம் மூலமும் பரவும். இந்த பிளேக்கை யெர்சீனியா பெஸ்டிஸ் என்ற ஒரு வகை பாக்டீரியா பரப்புகிறது. செப்டிசீமிக் பிளேக் மற்றும் நிமோனிக் பிளேக் ஆகிய இரு பிளேக் நோய்களும் யெர்சீனியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் பரவும்.
அக்குள்
இடுப்பு, அக்குள், கழுத்து ஆகிய ஏதேனும் ஒரு பகுதியில் கோழி முட்டையை காட்டிலும் பெரிதாக வீங்கும். அவை இளசாகவும் வெதுவெதுப்பாகவும் இருக்கும். காய்ச்சல், அதிக குளிர், தலைவலி, தசை வலி, சோர்வு ஆகியவை ஏற்படும். கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை 3200 பேர் இந்த புபோனிக் பிளேக்கால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 584 பேர் பலியாகிவிட்டனர்.