For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெடித்து சிதறிய ''குழந்தை எரிமலை''.. பெரும் சுனாமி.. இந்தோனேசிய பேரிடருக்கு என்ன காரணம்?

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை தொடர்ந்து அங்கு பெரிய சுனாமி ஏற்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வெடித்து சிதறிய எரிமலை, இந்தோனேசிய பேரிடருக்கு என்ன காரணம்?

    ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை தொடர்ந்து அங்கு பெரிய சுனாமி ஏற்பட்டு இருக்கிறது.

    இந்தோனேசியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சுனாமி ஏற்பட்டது. அதற்கு பாலி தொடங்கி பல இடங்களில் உள்ள எரிமலைகள் அவ்வப்போது வெடித்து வந்தது.

    இந்த வருடம் முழுக்க இந்தோனேசியாவில் எரிமலை அடிக்கடி வெடித்த வண்ணம் இருந்தது. நேற்று இரவில் வெடித்த கரகட்டாவ் எரிமலையால் தற்போது அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளது.

    பலி

    இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் 43 பேர் பலியாகி உள்ளனர். இந்த சுனாமியில் 600 பேர் காயமடைந்துள்ளனர். அங்கு மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    சைல்ட் எரிமலை

    சைல்ட் எரிமலை என்று இந்த கரகட்டாவ் எரிமலை அழைக்கப்படுகிறது. இது வெடித்த காரணத்தால்தான் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டது. இந்த எரிமலை வெடித்து சில நிமிடங்களில் சுனாமி ஏற்பட்டுள்ளது.

    என்ன காரணம்

    இந்த எரிமலை வெடிப்பை தொடர்ந்து கடலுக்கு அடியில் நில அடுக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நில அடுக்கு நகர்ந்துள்ளது. இந்த நகர்வு காரணமாக சுனாமி ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    யாரும் கணிக்கவில்லை

    ஆனால் இதை முதலில் இந்தோனேசிய பேரிடர் ஆணையம் சரியாக கணிக்கவில்லை. சுனாமிக்கு வெகு சில நொடிகளுக்கு முன்புதான் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் தற்போது அங்கு பலி எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

    English summary
    The real reason behind Indonesia TSunami.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X