போதையில் மட்டையான வாலிபர்.. அப்படியும் பலாத்காரம் செய்த காதலி! மடக்கி பிடித்தபோலீஸ்
வாஷிங்டன்: போதையில் மட்டையாக மயங்கி கிடந்த காதலனுடன் பலவந்தமாக செக்ஸ் வைத்துக்கொண்டிருந்த காதலியை போலீசார் கையும் களவுமாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் நோர்போல்க் நகரில், கார் பார்க்கிங் ஒன்றில், ஒரு நடுத்தர வயது ஆண் மல்லாந்து படுத்து கிடக்க, அவரின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு பெண் ஒருவர் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டிருந்தார்.
Norfolk couple admits to getting drunk, having sex in middle of shopping center parking lot http://t.co/0aqjvBQIhI pic.twitter.com/h9okZMPb2K
— WTVR CBS 6 Richmond (@CBS6) September 10, 2015
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தபோது, அந்த பெண் அதே கோலத்தில்தான் இருந்தார்.
இருவரும் மேலாடை அணிந்திருந்தபோதிலும், பொது இடத்தில் வைத்து செக்ஸ் வைத்துக்கொண்டதற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டார். ஆனால், ஆண் மயக்க நிலையில் இருந்ததை பார்த்து சந்தேகித்த போலீசார், அவரை மருத்துவமனையில் சேர்த்து இயல்பு நிலைக்கு கொண்டுவந்தனர்.
அப்போதுதான், அவ்விருவரும் காதலர்கள் என்பதும், மது போதையில் இருக்கும்போது காதலன் மட்டும் நினைவிழந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ஜாக்சன் என்ற பெயர் கொண்ட அப்பெண்ணிடம் கேட்டபோது, நான் நல்ல மூடில் இருந்தேன். ஆனால், காதலன் மயங்கிவிட்டான். எனவே, என்னால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல், நானே உடலுறவு கொள்ள ஆரம்பித்தேன். மயங்கிய நிலையில் காதலன் இருந்ததால், என்னால் சரியாக உறவு கொள்ள முடியவில்லை. தொடரந்து முயற்சி செய்து பார்த்துக்கொண்டிருந்தபோது, நீங்கள் வந்து கைது செய்துவிட்டீர்கள். இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.