For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூக்கத்தை கெடுத்த 6 வயது சிறுவனின் விரல்கள், மர்ம உறுப்பை வெட்டிய பெண்

By Siva
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் தனது தூக்கத்தை கெடுத்த பக்கத்து வீட்டு 6 வயது சிறுவனின் விரல்கள், மர்ம உறுப்பை ஒரு பெண் கத்தியால் வெட்டியுள்ளார்.

சீனாவின் கிழக்குப்பதியில் உள்ள ஷாவ்தாங் கவுன்ட்டியைச் சேர்ந்தவர் லூ. அந்த பெண் தனது உறவினர் வீட்டிற்கு சென்று படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 6 வயது சிறுவன் ஷியாவ்மிங் விளையாடுவதற்காக அந்த அறைக்குள் நுழைந்துள்ளார்.

உடனே லூ அந்த சிறுவனை அறையில் இருந்து வெளியே தள்ளி கதவை பூட்டியுள்ளார். சிறிது நேரத்தில் சிறுவன் மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்துள்ளார். தூக்கத்தை கெடுத்ததால் ஆத்திரம் அடைந்த லூ கத்தி மற்றும் கத்தரிக்கோலை எடுத்து சிறுவனின் விரல்கள், மர்ம உறுப்பை வெட்டியுள்ளார்.

மேலும் கத்தியால் சிறுவனின் முகம், தலை மற்றும் உடம்பில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லூவை கைது செய்துள்ளனர்.

லூ மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் மர்ம உறுப்பும், பல விரல்களும் வெட்டப்பட்டதாக அவரின் தந்தை ஜோ தெரிவித்துள்ளார்.

லூக்கு இந்த வழக்கில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
In a gruesome incident, a woman in eastern China has allegedly cut off fingers and genitals of a six-year-old toddler for disturbing her sleep.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X