ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்.. பார்சலில் வந்த உணவில் 40 கரப்பான்பூச்சிகள்!
சீனாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவில், கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெய்ஜிங்: சீனாவில் பெண் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில், 40க்கும் அதிகமான கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு சீனாவில் கேங்டாக் மாகாணத்தில் உள்ளது சாந்தோவ் நகரம். இந்த நகரத்தை சேர்ந்த ஒரு பெண், இரவு உணவுக்காக தனக்கும் தனது நண்பர்களுக்கும் சேர்த்து, ஆன்லைன் மூலம் வாத்துக்கறி ஆர்டர் செய்தார்.
உணவு பொட்டலத்தை திறந்த போது, அதில் ஒரு கரப்பான் பூச்சி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண் மொத்த உணவு பொட்டலத்தையும் பிரித்து சோதித்து பார்த்தார். அப்போது அதில் 40க்கும் அதிகமான கரப்பான் பூச்சிகள் இருந்தது தெரியவந்தது.
Also Read | வெயில் கொடுமை.. குட்டீஸ்க்கு ஹேப்பி நியூஸ்.. ஜுன் 10 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு!
இதையடுத்து அந்த பெண், சம்மந்தப்பட்ட உணவகத்தில் புகார் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக அவர் போலீசிலும் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சாப்பாட்டு பொட்டலத்தில் இருந்து கரப்பான் பூச்சிகளை எடுத்த போது, அந்த பெண்கள் அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.