சொட்டு தண்ணீர் இல்லாமல் வறண்டு போகப் போகுதாம் பெங்களூரு.. பகீர் தகவல்!
கேப் டவுனை தொடர்ந்து உலகின் 11 முக்கிய நகரங்களில் குடிநீர் இல்லாமல் போகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
லண்டன்: கேப் டவுனை தொடர்ந்து உலகின் 11 முக்கிய நகரங்களில் குடிநீர் இல்லாமல் போகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க நகரான கேப் டவுனில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு நபர் ஒருவர் 25 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கேப் டவுன் நகரில் கடைசி சொட்டு தண்ணீரும் தீர்ந்து விரைவில் ஜீரோ டே என்ற நிலை உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதேபோன்ற நிலை உலகின் 11 முக்கிய நகரங்களில் உருவாகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சா பாலோ
பிரேசிலின் பொருளாதார தலைநகரமாக அழைக்கப்படும் ஸா பாலோ, உலகின் அதிக மக்கள் தொகை உள்ள நகரங்களில் ஒன்று. கேப் டவுனில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை, 2015-ம் ஆண்டு ஸா பாலோ நகரத்திலும் ஏற்பட்டது. அப்போது இங்கிருந்த முக்கிய ஏரியும் 4% தண்ணீர் மட்டுமே இருந்தது.
நெருக்கடியின் உச்சக்கட்டத்தில், 21.7 மில்லியன் மக்களுக்கு 20 நாட்களுக்குக் குறைவான நீர் மட்டுமே இருந்தது. தண்ணீர் திருட்டை தடுக்க போலீசார் பெரும்பாடுபட்டனர். 2016-ம் ஆண்டு தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் நகரின் முக்கிய ஏரியில், எதிர்பார்த்த அளவை விட 15% குறைந்தது தண்ணீர்.
பெங்களூரும் லிஸ்டில்
தென்னிந்திய நகரமான பெங்களூரும் தண்ணீர் இல்லாமல் தவிக்கப்போகும் நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியைத் தொடர்ந்து புதிய சொத்துக்களின் வளர்ச்சியால், நகரின் நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை நிர்வகிக்க உள்ளூர் அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
நிலைமை மோசமாக்குவதற்குள் பழங்கால ப்ளம்பிங் முறை அவசியம் என மத்திய அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது. பெங்களூரு நகரில் பாதிக்கும் மேற்பட்ட குடிநீர் வேஸ்டாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனாவைப் போலவே, இந்தியாவும் தண்ணீர் மாசுபாட்டால் போராடுகிறது. இதில் பெங்களூர் நகரமும் விதிவிலக்கல்ல. நகரின் 85 சதவீத ஏரிகளில் உள்ள தண்ணீரை பாசன மற்றும் தொழில்துறை குளிர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. ஒரு ஏரியில் கூட குடிக்க அல்லது குளிக்கும் அளவுக்கு பொருத்தமான தண்ணீர் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
சீனாவின் பெய்ஜிங்
ஒரு மனிதருக்கு ஆண்டுக்கு 1000 கியூபிக் மீட்டர் ஃபிரஷ் தண்ணீர் கிடைக்காவிட்டால் அந்த நகரில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவிக்கிறது. ஆனால் 2014 ஆம் ஆண்டில் பெய்ஜிங் நகரில் 20 மில்லியன் மக்களுக்கு 145 கியூபிக் மீட்டுமே தண்ணீல் இருந்தது. சீனா உலகின் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்தை கொண்டுள்ளது. ஆனால் 7 சதவீதம் மட்டுமே ஃபிரஷ் தண்ணீரை கொண்டுள்ளது சீனா. கொலம்பியா பல்கலைக் கழக ஆய்வில் 2000 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 13% தண்ணீர் சேமிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தின் கெய்ரோ
உலகின் மிகப்பெரிய நாகரிகங்களில் ஒன்றான நைல் நதியிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவுள்ளது. நைல் நதி எகிப்தின் 97 சதவிகித நீர் ஆதாரமாக உள்ளது, ஆனால் இது அதிகரித்து வரும் வேளாண்மை மற்றும் குடியிருப்பு கழிவுகளால் குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு புள்ளிவிவரங்களின் படி குறைந்த நடுத்தர வருவாய் நாடுகளின் பட்டியலில் உயர் தரவரிசையில் உள்ளது. ஆனால் எகிப்தில் நீர் மாசுபாடு தொடர்பான இறப்பு எண்ணிக்கை அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என ஐநா மதிப்பிட்டுள்ளது.
ஜகார்த்தாவிலும் தட்டுப்பாடு
பல கடலோர நகரங்களைப் போலவே, இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவும் கடல் நீர் மட்டத்தின் உயர்வால் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. ஆனால் ஜகார்த்தாவில் நேரடி மனித நடவடிக்கை மூலம் நிலைமை மோசமாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் 10 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் குழாய் தண்ணீரை அணுகுவதற்குக் காரணம், கிணறுகள் சட்டவிரோதமாக தோண்டி எடுப்பதால்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, ஜகார்த்தா கடல் மட்டத்திலிருந்து 40 சதவீதற்கும் கீழே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான மழை இருந்தபோதிலும், காற்றோட்டமில்லாத கான்க்ரீட்களால் மழைநீரை உறிஞ்சமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவிலும் தண்ணீர் பிரச்சனை
உலகின் ஒரு காலாண்டுக்கான புதிய நீர்த்தேக்கத்தினை ரஷ்யா பெற்றுள்ளது. ஆனால் தொழிற்துறை மரபு ஏற்படும் மாசுபாடு பிரச்சினைகளால் அவை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக மாஸ்கோ நகருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் ஏனெனில் அங்கு 70% தண்ணீர் தேவை மேற்பரப்பு நீரைச் சார்ந்துள்ளது. ரஷ்யாவில் மொத்த குடிநீர் இருப்புக்களில் 35% முதல் 60% சதவிகிதம் சுகாதாரத் தரங்களைச் சந்திக்கவில்லை என்று அதிகாரப்பூர்வ கட்டுப்பாட்டு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
துருக்கியிலும் தண்ணீர் பஞ்சம்
துருக்கியின் ஒரு நகரான இஸ்தான்புல்லில் 2016-ம் ஆண்டு ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்குக் கிடைக்கும் தண்ணீர் 1700 கன மீட்டருக்கும் குறைவாகச் சென்றுவிட்டது. இதனால் 2030-ல் தண்ணீர் பற்றாக்குறை மோசமாகலாம் என உள்ளூர் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக இஸ்தான்புல்லில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என்றும் 2014ஆம் ஆண்டிலிருந்து சேமிக்கும் நீரின் அளவு 30 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிகோவிலும் தட்டுப்பாடு
மெக்சிகன் தலைநகரில் 21 மில்லியன் மக்களில் பலருக்கு நீர் பற்றாக்குறை எதுவும் இல்லை. ஆனால் இந்த நகரத்தில் வாழும், ஐந்து பேரில் ஒருவருக்கு சில மணிநேரங்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. வெறும் 20% மக்களுக்கு மட்டுமே நாள் முழுவதும் தண்ணீர் கிடைக்கிறது. தொலைதூர நீர் ஆதாரங்களில் இருந்து மெக்ஸிகோ நகரம் தண்ணீர் பெறுகிறது. ஆனால் குழாய்களில் ஏற்படும் கசிவுகளால் 40% தண்ணீர் வீணாகிறது.
லண்டனும் எதிர்கொள்ளும்
உலகின் மற்ற நகரங்களைப் போல லண்டனிலும் நிதி பற்றாக்குறை ஏற்படும் என தெரியவந்துள்ளது. ஆனால் உண்மையில் இது வித்தியாசமானது.சராசரியாக வருடாந்திர மழையானது சுமார் 600 மிமீ ஆகும். இது பாரிஸ் நகரின் சராசரியைவிட குறைவாகவும் நியூயார்க் பெறும் மழையின் பாதியளவும் ஆகும். சராசரியாக, லண்டன் தேம்ஸ் மற்றும் லீ ஆற்றிலிருந்து இருந்து 80% தண்ணீரை பெறுகிறது. கிரேட்டர் லண்டன் ஆணையத்தின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டு நெருக்கத்தில் தண்ணீர் பிரச்சனையை சந்திக்கும் என்றும் 2040 ஆம் ஆண்டளவில் "கடுமையான பற்றாக்குறையை" கொண்டிருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் டோக்கியோ
ஜப்பானிய தலைநகர் டோக்கியோவிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மேற்கு கரையோரத்தின் சியாட்டிலின் நகரத்தில் உள்ள மழைப்பொழிவு அளவைக் கொண்டிருக்கிறது, இது மழைக்காக புகழ் பெற்ற நகரம். இருப்பினும், மழைப்பொழிவு ஆண்டின் நான்கு மாதங்களில் மட்டுமே உள்ளது. டோக்கியோவில் குறைந்த பட்சம் 750 தனியார் மற்றும் பொது கட்டிடங்கள் மழைநீர் சேகரிப்பு மற்றும் பயன்பாடு அமைப்புகளை கொண்டுள்ளது. டோக்கியோலில் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் 70 சதவீத நீர் தேவையை ஆறுகள், ஏரிகள், மற்றும் உருகிய பனி நம்பியே உள்ளனர். பைப்லைன் உள்கட்டமைப்பில் சமீபத்திய காலத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கசிவு மூலம் வேஸ்ட் ஆகும் நீரை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா
ஒவ்வொரு வருடமும் மழை பெய்யும் ஐந்து அமெரிக்க மாநிலங்களில் புளோரிடாவும் ஒன்று. இருப்பினும், அதன் மிக பிரபலமான நகரமான மியாமியில் தண்ணீர் பற்றாக்குறை உருவாகிறது. 1930 களில் இந்த சிக்கல் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், கடல் மட்ட உயர்வின் வேகத்தால் இது அதிகரித்துள்ளது. மியாமியின் அண்டை நகரங்கள் ஏற்கனவே போராடி வருகின்றன. மியாமியின் வடக்கே ஒரு சில மைல் தொலைவில் உள்ள ஹாலன்டலே கடற்கரை, உப்புநீர் ஊடுருவல் காரணமாக அதன் எட்டு கிணறுகளில் ஆறு மூடப்பட்டுள்ளது குறிப்பிபடத்தக்கது.