அமெரிக்காவில் “எய்ட்ஸ்” நோயை தாறுமாறாய் பரப்பும் இளைஞர்- தடுக்க கோர்ட் உத்தரவு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் பலருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பி வரும் இளைஞர் ஒருவரை தடுத்து நிறுத்த கோர்ட் உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் அதிக அளவில் பரவி வருகிறது. இங்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
1 லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதல் குறித்து தெரியாமல் வாழ்கின்றனர்.
எய்ட்ஸை பரப்பும் வாலிபர்:
இந்த தகவலை நோய்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எய்ட்ஸ் நோய் பரப்பும் ஒரு வாலிபர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் தாக்கிய ஏ.ஓ:
அந்த நபரின் பெயர் "ஏ.ஓ" என இன்ஷியலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை கடந்த 2008 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோய் தாக்கியது.
பாதுகாப்பற்ற முறை:
இவர் பல பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு வைத்து கொண்டார்.
8 பேருக்கு எய்ட்ஸ் நோய்:
அதனால் இவர் மூலம் கடந்த 2010 முதல் 2014 ஆம் ஆண்டுவரை 8 பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது.
தடுத்து நிறுத்த உத்தரவு:
எனவே, அவர் எய்ட்ஸ் நோய் பரப்புவதை தடுக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் அவர் பாதுகாப்புடன் கூடிய உடலுறவு வைத்து கொள்ளவும், அதன் மூலம் எய்ட்ஸ் நோயை பரவாமல் தடுக்கவும் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையத்துக்கு உத்தரவிட்டது.