For Daily Alerts
Just In
கள்ளக்காதல் தாயை கைப்பேசியில் படமெடுத்து காட்டிக் கொடுத்த மகன்!
புலாவியோ: ஜிம்பாவே நாட்டில் தாயின் கள்ளக்காதலை செல்போனில் படம் பிடித்து தந்தைக்கு போட்டுக் காட்டி மாட்டி விட்டுள்ளான் மகன் ஒருவன்.
ஜிம்பாவே நாடு புலாவியோ சேர்ந்தவர் துமிசானி என்பவர்.அவர் தனது மனைவியுடன் நகரில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
சில நாட்களாக தனது தந்தையும், தாயும் சண்டை போட்டு வந்ததை கவனித்து வந்த சிறுவனுக்கு தனது தாயார் இன்னொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை தெரியவந்தது. உடனே அவன் தனது செல்போனில் தாயின் கள்ளத்தொடர்பை படம் பிடித்து தந்தையிடம் காண்பித்துள்ளான்.
மகன் காண்பித்த புகைப்படங்களை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த துமிசானி தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் வேறு வழியின்றி மனைவி, தனது கணவரை விவாகரத்து செய்வதற்காக விண்ணப்பித்துள்ளார். நீதிமன்றமும் இவர்களது விவாகரத்தை உறுதி செய்துள்ளது.
Comments
English summary
Zimbabwe couple got divorce by wife’s illegal contact with another man. Son of the couple shot all the matters about his mother’s illegal contact and given to his father.
Story first published: Saturday, May 31, 2014, 13:53 [IST]