காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் உள்பட இருவர் பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் உள்பட இருவர் பலியாகிவிட்டனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியுள்ளது.
Recommended Video
மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த புரேவி புயலாலும் ஏற்கெனவே வந்து சென்ற நிவர் புயலாலும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. இந்த நிலையில் நிவர் புயலால் காற்றுவீசியதில் பல இடங்களில் மின் வயர்கள் அறுந்து விழுந்தன.
அது போல் அவற்றை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அது போல் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்குள்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து கிடந்தது. இதை சரி செய்ய மின் ஊழியர் பாக்கியநாதன் சம்பவ இடத்திற்கு வந்தார்.
அவருக்கு உதவியாக தயாளன் என்பவர் உடனிருந்தார். இந்த நிலையில் உயர்மின் அழுத்த கம்பியை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.