கருத்துக் கணிப்புகள் எல்லாமே கருத்துத் திணிப்புகள்... டிடிவி தினகரன் பேட்டி
காஞ்சிபுரம்: 2 மாதத்திற்குள் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை டிடிவி தினகரன் மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, நாடாளுமன்ற தேர்தல் வரை பொறுத்திருங்கள், அதன் பின் இரண்டு மாதத்திற்குள் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வரும் என்றார்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருந்த வரையில் தான் இரட்டை இலை சின்னம் வெற்றி சின்னமாக இருந்ததாகவும் தினகரன் கூறினார்.
வரும் தேர்தலில் திமுக வெற்றிபெறும் என கருத்துக் கணிப்புகள் கூறினால், திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட பயந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தேர்தல் தொடர்பாக எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் எல்லாமே கருத்துத் திணிப்புகள். இறுதியில் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். கருத்துக் கணிப்புகள் தவறு என்பது அப்போது புரியும் என்றும் கூறினார்.