அத்தி வரதர் தரிசனம் இன்று 8 மணி நேரம் ரத்து .. கலெக்டர் பொன்னையா முக்கிய அறிவிப்பு
காஞ்சிபுரம்: காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் இன்று 8 மணி நேரம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அருள்பாலித்து வருகிறார். நாளை அத்திவரதர் தரிசனம் நிறைவு பெற உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து கொண்டிருக்கிறார்ர்கள். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் அத்திவரதர் காட்சி அளித்தார். கடந் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (வியாழக்கிழமை) ஆடி கருடசேவையையொட்டி நண்பகல் 12 மணிக்கு அத்திவரதர் தரிசனத்திற்கான கிழக்கு கோபுர வாயில் மூடப்படுகிறது. விஐபி தரிசன வாயிலும் பிற்பகல் 12 மணிக்கு அடைக்கப்படும். உள்ளே சென்ற பக்தர்கள் மாலை 5 மணிக்குள் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேற வேண்டும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை கருடசேவை விழா நடைபெறும். இதனைத் தொடர்ந்து 8 மணிக்கு மேல் மீண்டும் தரிசனம் தொடர்ந்து நடைபெறும். கடைசி நாளான நாளையும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்.
உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ. 100 லட்சம் கோடி ஒதுக்கீடு.. சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு!
பொது தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் மட்டும் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 17ம் தேதி அனைத்து தரிசனமும் முழுமையாக ரத்து செய்யப்படும். இதுவரை அத்திவரதரை 85 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துள்ளனர்.
வருகிற 17-ந்தேதி மந்திரங்கள் ஓதப்பட்டு அத்திவரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் பத்திரமாக வைக்கப்படும். கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்திவரதரை எடுத்து செல்ல மூங்கில் பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.