காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்படி என்ன விஷேசம் இன்று.. அத்தி வரதரை தரிசிக்க கட்டுங்கடங்காமல் குவியும் மக்கள்... திணறும் காஞ்சி

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: அத்தி வரதரை இன்று எப்பபடியும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பக்தர்கள் அலைஅலையாய் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன விஷேசம் என்பதை இப்போது பார்த்துவிடுவோம்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் மூலவர் அத்தி வரதர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்த சரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்து 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

Athi varadar darshan:why today devotees crowd increased today

இதன்படி கடந்த 1979ம் ஆண்டுக்கு பிறகு அத்தி வரதர் விழா வைபவம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 17ம் தேதி வரை அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

40 வருடத்துக்கு ஒருமுறை அருள் பாலிக்கும் அத்தி வரதரான பெருமாளை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசித்துவிட வேண்டும் என எண்ணி பக்தர்கள் நாள்தோறும் காஞ்சிபுரம் வருகிறார்கள்.

கூட்ட நெரிசல், கால தாமதம் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் மக்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.. கடந்த ஜூலை 31 வரை சயன கோலத்தில் (படுத்த கோலத்தில்) அருள் பாலித்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 4ம் தேதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்வதற்காக கட்டுக்கடங்காத அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இன்று ஆடிபூரம் என்பதாலும் , சதுர்த்தி விரதம் என்பதாலும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது. கூடுதலாக ஞாயிற்றுக்கிழமை இன்று விடுமுறை நாள் என்பதாலும் லட்சக்கணக்கான மக்கள் அத்திவரதரை பார்க்க வந்துள்ளனர். இதனால் மொத்த காஞ்சிபுரமும் நெரிசலில் சிக்கி திணறுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால்

English summary
Athi varadar darshan:why today devotees crowd increased todayin kanchipuram, because some reason behinds
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X