புதிதாக உருவான செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம்பெறும் பகுதிகள் இவை தான்! விவரம்
காஞ்சிபுரம்: புதிதாக உருவான செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம்பெறும் பகுதிகள் எவை எவை மற்றும் எத்தனை வருவாய் வட்டங்கள் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
இதன்படி தமிழக அரசிதழில் செங்கல்பட்டு புதிய மாவட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இதில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மற்றும தாம்பரம் உள்பட மூன்று கோட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் வருவாய் வட்டங்கள் இடம் பெற்றுள்ளன அவற்றின் விவரம்
1. செங்கல்பட்டு
2. மதுராந்தகம்
3. செய்யூர்
4. திருக்கழுகுன்றம்
5. திருப்போரூர்
6. தாம்பரம்
7. பல்லாவரம்
8. வண்டலூர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர்(புதியது) ஆகிய இரண்டு கோட்டங்களும் ஐந்து வருவாய் வட்டங்களும்(தாலுகாக்கள்) இடம் பெற்றுள்ளது.அவற்றின் விவரம்
1.காஞ்சிபுரம்
2.உத்திரமேரூர்
3. ஸ்ரீபெரும்புதூர்
4. வாலாஜாபாத்
5. குன்றத்தூர்(புதியது)
இந்த அரசாணையை தமிழக அரசின் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார்.