காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குன்றத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி.. பீதியில் காஞ்சிபுரம் மாவட்டம்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட குன்றத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது.

காஞ்சிபுரத்தில் கொரோனாவால் 12 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

Coronavirus cases found in 6 people from the same family in Kundrathur

இந்த நிலையில் குன்றத்தூரில் வசித்து வரும் காய்கறி வியாபாரி ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து குடும்ப உறுப்பினர்களில் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 2 வார குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் காய்கறி கடைக்கு வந்தவர்களின் விவரங்கள் குறித்தும் மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு.. நாளை 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு.. அரசு அறிவிப்பு கொரோனா பாதிப்பு.. நாளை 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு.. அரசு அறிவிப்பு

தற்போது 6 பேரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா உறுதியானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Coronavirus cases found in 6 people from the same family in Kundrathur, Kanchipuram District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X