காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடு ராத்திரியில்.. தூங்கிய மனைவியை உற்று பார்த்த கணவர்.. அலறி அடித்துக் கொண்டு.. கொடுமை!

காஞ்சிபுரம் அருகே தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: தூங்கி கொண்டிருந்த கணவன், திடீரென எழுந்து மனைவியை பார்த்தார்.. பிறகு அலறி அடித்து கொண்டு ஓடிப்போய் தற்கொலையே செய்து கொண்டார்!

Recommended Video

    காஞ்சிபுரம்: நடத்தையில் சந்தேகம்.. கணவன்-மனைவி தற்கொலை.. அனாதையான 2 பிஞ்சு குழந்தைகள்…!

    காஞ்சிபுரம் அருகே விநாயகபுரம் குப்பம்மாள் என்ற நகர் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் கதிர்வேல்.. இவர் அதே பகுதியில் டைல்ஸ் கடையை சொந்தமாக நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மணிமேகலை.

    Couple commit suicide due to family issue near Kancheepuram

    இவர்களுக்கு 8 வயதில் முத்து அட்சயா என்ற 8 வயது மகளும், நிவாசினி என்ற 4 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது.

    இதற்கு காரணம் கணவன் மீது மனைவிக்கு உள்ள தீர்க்கமான சந்தேகம்தான்.. இது தொடர்பாக எல்லை மீறிய தகராறுகள் இவர்களுக்குள் வந்துபோயுள்ளது. அப்படித்தான் நேற்றும் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.. பிறகு, கதிர்வேல், குழந்தைகள் அனைவரும் தூங்க போய்விட்டனர்.. அந்த நேரம் பார்த்து அழுதுகொண்டே இருந்த மணிமேகலை, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பிறகு தூங்கி கொண்டிருந்த கதிர்வேலு நடுராத்திரி திடீரென எழுந்து பார்த்தால், மணிமேகலை பிணமாக கிடந்தார்.. இதனால் நடுநடுங்கி போன கதிர்வேலும் அப்போதே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இது தெரியாமல், காலையில் 2 குழந்தைகளும் எழுந்து பார்த்தபோது, அம்மா, அப்பா இருவருமே தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறினர்.

    சித்ரா தற்கொலை: உரிய விசாரணை நடக்கிறது... தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - ஜெயக்குமார் சித்ரா தற்கொலை: உரிய விசாரணை நடக்கிறது... தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - ஜெயக்குமார்

    அந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, பிறகு பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு விஷயத்தை சொன்னார்கள்.. போலீசாரும், சம்பவ இடத்துக்கு வந்து 2 உடல்களையும் கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். "சந்தேக நோய்" குடும்பத்தில் நுழைந்து இளம் தம்பதியினரையே காவு வாங்கிவிட்ட நிலையில், அந்த 2 குழந்தைகளும் தாய், தகப்பன் இன்றி கதறி அழுது கொண்டுள்ளனர்.

    English summary
    Couple commit suicide due to family issue near Kancheepuram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X