மோடிக்கு வயதாகி விட்டது... எங்களுக்கு கவலை இல்லை... திருநாவுக்கரசர் பேச்சு
காஞ்சிபுரம்: மோடிக்கு வயதாகி விட்டது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். மேலும், ராகுல்காந்திக்கு இன்னும் வயதாகவில்லை என்றும் அவர் பிரதமரானாலும் ஆகவில்லை என்றாலும் கவலை இல்லை என்றார்.
பாஜகவை பொறுத்தவரை வாஜ்பாய் தோற்றவுடன் அவரை மாற்றிவிட்டார்கள், அத்வானி தோற்றவுடன் அவரை மாற்றிவிட்டார்கள், அது போல மோடி தோற்றவுடன் அவரையும் மாற்றி விடுவார்கள் என்றும் கூறினார்.
திமுக கூட்டணியிலிருந்து காங். விலகுகிறதா.. போலி அறிக்கையால் பரபரப்பு.. டிஜிபியிடம் புகார்!
மறைந்த தலைவர் ராஜீவ்காந்தியை மோடி விமர்சனம் செய்தது மிகவும் கீழ்தரமான செயல். அது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார். முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 120 முதல் 150 இடங்களுக்கு மேல் தலைகீழாக நின்றாலும் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியாது என்றும், மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் உறுதி என்றும் பேசினார்.
கடந்த 8 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி நடந்த போதிலும் மக்களுக்கு ஒரு நன்மையும் நடக்கவில்லை. இனி 2 ஆண்டுகளில் அவர்கள் மக்களுக்கு என்ன நன்மை செய்துவிடப் போகிறார்கள். அ.தி.மு.க.வின் மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறினார்.