தமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற டி ஆர் பாலு கோரிக்கை
ஸ்ரீபெரும்புதூர்: தமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் திமுக இளைஞர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தா.மோ.அன்பசரன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்
பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வர வேண்டும்.
பிரதமர் மோடியை பாம்பு, முதலைகளை வைத்து கொல்லப்போகிறேன்.. வீடியோ வெளியிட்ட பாக். பாடகி
அதற்கு திமுக சார்பில் அழுத்தம் தரப்படும். வருகிற சட்டப்பேரவை கூட்டத்தில் சட்டம் இயற்றவில்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் சட்டம் கொண்டு வருவார் என்றார்.
மேலும் தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூர் தற்போது முடங்கியுள்ளது. கடந்த 21 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு நிறுவங்கள் உற்பத்தியை குறைத்து உள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதற்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை என்று குற்றம்சாட்டினார். இதற்கு பாஜக அரசு தான் காரணம் என்றார்.