காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டோல்கேட்டில் கலாட்டா.. நாம் தமிழர் கட்சியினருடன் பூத் ஊழியர்கள் வாக்குவாதம்.. கண்ணாடி உடைப்பு

பூத் கண்ணாடியை நாம் தமிழர் கட்சி உறுப்பினர் அடித்து நொறுக்கினார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பூத் கண்ணாடியை நாம் தமிழர் கட்சி உறுப்பினர் அடித்து நொறுக்கினார் -வீடியோ

    காஞ்சிபுரம்: "என்னது பணம் வேணுமா.. டிக்கெட் எல்லாம் எடுக்க முடியாது" என்று சொல்லி டோல் பிளாசா பூத் கண்ணாடியை கையாலேயே உடைத்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சி உறுப்பினரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தரமான சாலை வேண்டும் என்றால் சுங்கக் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும் என்று அன்று நிதின் கட்கரி தெரிவித்ததில் இருந்தே.. இந்த கட்டணத்துக்கு எதிர்ப்புதான்.

    Naam Tamizhar Party members involved in violating in Tollgate

    பல கட்சிகள் சுங்க சாவடி கட்டணத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னிறுத்தி வருகின்றன. அதனால்தான், அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இந்த டோல்-கேட்டை கடந்து செல்லும்போது, பெரும்பாலும் கட்டணம் செலுத்துவதே இல்லை. இதனால் ஆங்காங்கே தகராறுகளும் ஏற்பட்டுள்ளன.

    இப்படித்தான் நாம் தமிழர் கட்சியும் சர்ச்சை புகாரில் சிக்கி உள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு - பரனூர் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடிக்கு, நாம் தமிழர் கட்சி கொடி பொருத்திய கார் ஒன்று வந்தது.

    ஸ்கூல் கிளாஸ் ரூமிலேயே.. அந்த டீச்சரும், வாத்தியாரும்.. ஷாக் ஆன பெற்றோர்கள்!ஸ்கூல் கிளாஸ் ரூமிலேயே.. அந்த டீச்சரும், வாத்தியாரும்.. ஷாக் ஆன பெற்றோர்கள்!

    அப்போது, சாவடியில் சுங்க வரி கேட்டதாகவும், அதற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் செலுத்த முடியாது என்று சொன்னதாகவும் தெரிகிறது. இதனால், காரில் இருந்தவர்களுக்கும், பூத் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கடைசியில் தகராறு வரை போய்விட்டது.

    அப்போது ஒரு கட்டத்தில் காருக்குள் இருந்த நபர், சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியதுடன், அங்கிருந்த கண்ணாடியை தன்னுடைய கைகளாலேயே உடைத்து தப்பிவிட்டு ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகி உள்ளது. தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர். ஆவேசமாக கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டு தப்பி ஓடியவர், விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

    English summary
    Naam Tamizhar party members attacks Paranur Tollgate for not giving toll fee and this cctv footage goes viral now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X