அத்திவரதரை பார்க்க நேரமாச்சு.. வழிவிடுங்க ப்ளீஸ்.. குடுகுடுன்னு ஓடிய நமீதா!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை நடிகை நமீதா நேற்று தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் பள்ளிக் கொண்டுள்ளார். இவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சியளிக்கிறார்.
அந்த வகையில் கடைசியாக 1979-ஆம் ஆண்டு காட்சியளித்த அவர் 40 ஆண்டுகள் கழித்து இந்த 2019-இல் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் காட்சியளித்து வந்தார். மொத்தம் 48 நாட்கள் காட்சியளித்தார்.
இந்த நிலையில் அத்திவரதரை பொதுமக்கள், அரசியல்வாதிகள், திரைத்துறையினர் என அனைத்து தரப்பினரும் தரிசனம் செய்தனர். எனினும் இன்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெரிசலால் அத்திவரதரை தரிசிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் அத்திவரதர் தரிசனம் நேற்றுடன் முடிவடைந்தது. அப்போது நடிகை நமீதா காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலுக்கு வருகை தந்தார். அவருடன் ரசிகர்களும் பட்டர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது நேரம் ஆகியதால் நமீதாவை அவரது கணவர் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வரிசையில் சென்றார். நமீதாவும் குடுகுடுவென ஓடிச்சென்று வரதரை தரிசித்தார். முன்னதாக துர்கா ஸ்டாலின், ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நயன்தாரா, சந்தோஷ் சிவன், அட்லி உள்ளிட்டோர் தரிசனம் செய்துள்ளனர்.