என்னாச்சு.. 45 நிமிஷம்தான்.. சிக்கன் சமைத்து சாப்பிட்ட இளைஞர் மூச்சு திணறி பலி.. ஸ்ரீபெரும்புதூரில்!
காஞ்சிபுரம்: சிக்கன் எடுத்து சமைத்து சாப்பிட்டவர் கொஞ்ச நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.. ஸ்ரீபெரும்புதூரில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை அவசர அவசரமாக சிகிச்சைக்கு கொண்டு வந்திருந்தனர்.. அவர் வடமாநில இளைஞர்.. வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார் ஆனால் சரியாக 45நிமிடத்தில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டதில், உயிரிழந்த இளைஞர் சக நண்பர்களுடன் சேர்ந்து சிக்கன் எடுத்து சமைத்து சாப்பிட்டு உள்ளார். சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அவருக்கு தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதனால் பதறிய நண்பர்கள் ஸ்ரீபெரும்புதூர் ஆஸ்பத்தியில் கொண்டு வந்து இளைஞரை அனுமதித்தனர்.. சிகிசை தந்து கொண்டிருக்கும்போதே இளைருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. எதனால் இந்த உடனடி மரணம் என்று மருத்துவர்கள் மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இறந்தவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
ரத்த மாதிரி ரிப்போர்ட் வந்த பிறகுதான் அந்த இளைஞர் எதனால் உயிரிழந்தார் என்பது தெரியவரும். எனினும் சிக்கன் சாப்பிட்டவர் சிகிச்சை பலனளிக்காமல் 45 நிமிஷத்துலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் தந்து வருகிறது.