காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஷகீலா வீட்டுக்குள் நுழைந்து.. திடீரென டிரஸ்ஸை கழட்டி நிர்வாணமாக நின்ற இளைஞர்.. ஸ்ரீபெரும்புதூர் ஷாக்

பெண் குழந்தைகளிடம் அத்துமீறிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: திடீரென ஷகீலா வீட்டுக்குள் நுழைந்து, கடகடவென டிரஸ்ஸை அவிழ்த்து போட்டுவிட்டு நிர்வாணமாக நின்றார் கண்ணன்.. இப்படி ஒரு ஷாக் சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது பிச்சிவாக்கம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் தமிழ்.. 35 வயதாகிறது.. மனைவி பெயர் ஷகிலா.. அவருக்கு 30 வயதாகிறது.. 11 மற்றம் 6 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர்.

 nude: police arrested man due to sexual torture near kancheepuram

தம்பதி 2 பேருமே கூலி வேலை செய்பவர்கள்.. அதனால் குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு தினமும் வேலைக்கு போய்விடுவார்கள்... இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே கண்ணன் என்பவரது அக்கா புதிதாக வீடு கட்டி கொண்டிருக்கிறார்கள்.. கண்ணனுக்கு 24 வயசாகிறது.. அதனால் அந்த புதுவீட்டை பார்வையிடுவதற்காக அடிக்கடி இந்த பகுதிக்கு வந்து போவார் கண்ணன்.

அப்படித்தான் சம்பவத்தன்று வீட்டை பார்வையிடுவதற்காக கண்ணன் வந்துள்ளார்.. அப்போது கண்ணன் தண்ணி அடித்திருந்தார்.. ஃபுல் போதையில் இருந்த கண்ணன், நேராக ஷகீலா வீட்டுக்குள் நுழைந்துவிட்டார்.. அந்த நேரம் பார்த்து ஷகீலாவின் குழந்தைகள் மட்டும் வீட்டிற்குள் இருந்தனர்.

அதை சாதகமாக்கி கொண்ட கண்ணன், கடகடவென தன்னுடைய டிரஸ்ஸை அவிழ்த்துபோட்டுவிட்டு, அடுத்த செகண்டில் நிர்வாணமாக நின்றார். 2 குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளார்.. திடீரென டிரஸ்ஸே இல்லாமல் ஒருவர் அருகில் வருவதை கண்ட 2 குழந்தைகளும் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

சும்மாவே கட்டி உருளுவாங்க.. சுதா நியமனத்தில் வெடித்து கிளம்பும் பூசல்.. தமிழக காங்கிரஸில் பரபரப்பு சும்மாவே கட்டி உருளுவாங்க.. சுதா நியமனத்தில் வெடித்து கிளம்பும் பூசல்.. தமிழக காங்கிரஸில் பரபரப்பு

பின்னர் தள்ளாடிக்கொண்டே கண்ணன் வெளியே வந்துவிட்டார்.. இதையடுத்து, வீடு திரும்பிய ஷகீலாவிடமும், அப்பாவிடமும் நடந்ததை பதறிகொண்டே சொல்லி அந்த குழந்தைகள் அழுதன.. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷகிலா உடனே ஸ்ரீபெரும்புதூர் மகளிர் போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் குடிகார கண்ணனை கைது செய்து போக்சோ சட்டத்தில் ஜெயிலில் அடைத்தது போலீஸ்!

English summary
nude: police arrested man due to sexual torture near kancheepuram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X