தேர்தல் பிரச்சாரத்தில் உடைந்து அழுத அன்புமணி.. ஐயா ஐயா என்று கோஷமிட்ட மக்கள்.. என்ன நடந்தது?
தேர்தல் பூத்தில் நாம்தான் இருப்போம், நமக்குத்தான் வெற்றி என்று பாமக வேட்பாளர் எம்.பி அன்புமணி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
காஞ்சிபுரம்: தேர்தல் பிரச்சாரத்தின் போது பாமக வேட்பாளர் எம்.பி அன்புமணி உடைந்து அழுத சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக மொத்தம் 7 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக இளைஞரணி செயலாளர் எம்.பி அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் தருமபுரியில் நேற்று அன்புமணி பிரச்சாரம் செய்தார். இதில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்... மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் அணி அமோக வெற்றி
என்ன நடந்தது
நேற்று அன்புமணி தர்மபுரி கடகத்தூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அவர் அங்கு பிரச்சாரம் செய்யும் போது அவரது வாகனம் பின்னால் நிறைய குழந்தைகள் ஓடி வந்தனர். இதனால் அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு எல்லா குழந்தைகளிடமும் தனித்தனியாக பேசினார்.
குழந்தைகள் வந்தனர்
அதன்பின் கடகத்தூர் பகுதியில் அவர் மக்கள் முன்னிலையில் பேசினார். அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே அப்படியே உடைந்து அழ தொடங்கினார். அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் பேசிக்கொண்டு இருக்கும்போதே மொத்தமாக உடைந்து அழுதார்.
உடைந்து அழுதார்
இவ்வளவு பாசம் வைத்துள்ள மக்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மக்கள் எனக்கு பெரிய அளவில் ஆதரவு அளிக்கிறார்கள். இவர்களுக்கு நான் எதாவது செய்ய வேண்டும் என்று அன்புமணி அழுதுகொண்டே குறிப்பிட்டார்.
|
மக்கள் பாசம்
இதையடுத்து அங்கிருந்த மக்கள் ஐயா, ஐயா என்று கூச்சலிட்டனர். இன்னும் சிலர் சார் அழாதீங்க சார் என்று கத்தினார்கள். இதையடுத்து அழுகையை நிறுத்திவிட்டு மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பிய அவர் தனது பேச்சை தொடங்கினார்.